Skip to main content

திருந்தி திரும்பி வந்த மனைவி... கணவருக்கு அரிவாள் வெட்டு!!! காதலன் கைது...

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
ddeee

 

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது மீனாட்சி பேட்டை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கங்காதுரை. கூலி தொழிலாளியான இவரது மனைவி செல்லம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 27. இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு, குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள கன்னித் தமிழ்நாடு என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் செல்லம் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீடு பார்த்து கணவன் மனைவி போல சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

 

செல்லம் உறவினர்கள் செல்லத்திடம் கணவர், இரு பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தவறான முறையில் யாரோ ஒருவருடன் சென்று குடும்பம் நடத்துவது முறையாகுமா? உன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கணவருடன் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என்று அறிவுரை கூறியுள்ளனர். தனது தவறை உணர்ந்த  செல்லம் மீண்டும் தனது கணவருடன் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

 

நேற்று கங்காதுரை அவரது மனைவி  செல்லம் மற்றும் அவரது நண்பர்களுடன் தினக்கூலி வேலைக்கு செல்வதற்காக மீனாட்சி பேட்டை அருகே உள்ள அய்யனார் கோயில் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் கங்காதுரையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கங்காதுரையின் தலையில் வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி செல்லத்தையும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார் சக்திவேல்.

 

இதுகுறித்து  செல்லம் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்துள்ளனர். தவறான வாழ்க்கைக்கு சென்று திருந்தி திரும்பி வந்தவரை வாழ விடாமல் அவரது கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு சக்திவேல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையில் வீசப்பட்ட 11 லட்சம்... பரபரப்பில் குறிஞ்சிப்பாடி!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

11 lakh thrown on the road ...

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. 

 

இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், 11 லட்சம் ரூபாய் பணம் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதூர் கிராமத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு தேர்தல் பறக்கும் படையினர் துணை ராணுவப் படையினருடன் விரைந்தனர். தேர்தல் பறக்கும் படையினர் வருவதைக் கண்ட சில நபர்கள் பணத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், சாலையில் கிடந்த 11.38 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகுமார் வருமான வரித்துறைக்குப் புகாரளித்த நிலையில், வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் ஒருசேர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு கூடியுள்ளது.

 

 

Next Story

கரோனா தொற்று பயத்தின் காரணமாக மூடப்பட்ட பேரூராட்சி அலுவலகம்... பொது மக்கள் அவதி...

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

Kurinjipadi

 

கரோனா பயத்தில் பேரூராட்சி அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு பேரூராட்சி செயல் அலுவலரும், ஊழியர்களும் தங்களை அலுவலத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளது பொது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் முகக் கவசங்களோ, கையுரைகளோ இல்லாமல் தன் நலம் பாராமல் தூய்மைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் செயல் அலுவலர் உட்பட்ட பேரூராட்சி ஊழியர்கள் தங்களுக்கு கரோனா தொற்று வந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக அலுவலகத்தில் இருந்து கொண்டே பொது மக்களின் அத்தியாவசிய குறைகளைக் கேட்கக்கூட அனுமதிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

மேலும் பேரூராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி மற்றும் தொழில் நடத்த உரிமம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என எந்தப் பணிகளையும் செய்து கொடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி படுவதாகக் கூறுகின்றனர்.

 

தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எந்த அரசு அலுவலகங்களையும் இழுத்து மூடிவிட்டு மக்கள் பணிகள் செய்ய வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த அலுவலக அதிகாரிகள் இப்படிச் செய்வதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.