Skip to main content

கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... காதலன், கால்டாக்சி ஓட்டுநர் கைது!!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

kovai

 

கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் காதலனும், கால்டாக்சி ஓட்டுநர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட மொபைல் ஃபோனில் முகப்புத்தகக் கணக்கு துவங்கியுள்ளார். அப்பொழுது ஏழுமலை என்ற நபர் முகப்புத்தகம் வழியாக அறிமுகமாகி, சிறுமியிடம் பழகியுள்ளார். ஏழுமலையை நேரில் சந்திக்க விரும்பிய சிறுமி, ஏழுமலையை சந்திக்க உதவுமாறு ஏழுமலையின் நண்பரான சண்முகவேல் என்ற கால்டாக்சி ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளார். கால் டாக்சி ஓட்டுநர் சண்முகவேல் அவரை கூட்டிச்சென்ற நிலையில், சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

 

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியைத் தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சியில் மீட்கப்பட்ட சிறுமி, தன்னை கூட்டிச் சென்ற கால்டாக்சி ஓட்டுநர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததையும், பின்னர் தான் ஏழுமலையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஏழுமலையும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கால் டாக்சி ஓட்டுநர் சண்முகவேல் மற்றும் காதலன் ஏழுமலை ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்