Skip to main content

கள்ளக்குறிச்சி இளம்பெண் டெல்லியில் மரணம்... மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

 incident in Delhi ... Women's Commission notice!

 


டெல்லியில் அழகு நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல் துறைக்கு மகளிர் தேசிய ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் லட்சுமி டெல்லி லஜ்பத் நகரில் உள்ள  பெண்கள் அழகு நிலையத்தில் தூய்மை பணியாளர் வேலைக்குச் சென்றுவந்த நிலையில் இன்று காலை வேலைக்குச் சென்ற அந்த இளம்பெண் சந்தேகத்திற்கும் இடம்தரும்வகையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மின்சார விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததாக அழகு நிலையம் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் பெண் இறந்து கிடந்த இடத்தில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்ததாக அப்பெண்ணின் தாய் அங்கம்மாள் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்த மக்கள் அந்த அழகு நிலையம் முன்பு குவிந்து இந்த மரணத்தில் மர்மம் உள்ளது எனவே போலீசார் அழகு நிலைய உரிமையாளர்களை முறையாக விசாரிக்க வேண்டும்  என  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்விற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்குத் தேசிய மகளிர் ஆணையம்,  இளம்பெண் மரணம் குறித்து வழக்குப்பதிந்து தொடர்புடைய நபர்களைக் கைது செய்யவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.