Skip to main content

கொடநாடு கொலை சம்பவம்; எடப்பாடிதான் முதல் குற்றவாளி?- ஆ ராசா பரபரப்பு பேட்டி!!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசுகையில்,

 

கொடநாடு கொலை சம்பவம் நடந்தபொழுது கொடநாட்டில் என்னென்னவெல்லாம் நடந்தது. எதைஎதையெல்லாம் மறைத்தார்கள் என்பது இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டும். உண்மை குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படி நேர்மையாக விசாரித்தால் தமிழக முதல்வர் எடப்பாடிதான் முதல் குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்கு எல்லா பூர்வாங்க ஆதரங்களும் ஒருவரால் உறுதிசெய்யமுடியும். 

 

a rasa

 நடந்த சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு,

 

5.12 .2016 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.14.2.2017 சசிகலா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை அறிவிக்கப்படுகிறது. 16.2,2017 எடப்பாடி சசிகலா காலில் தவழ்ந்து தவழ்ந்து வணங்கி எடப்பாடி முதல்வர் பதவி ஏற்கிறார். 24.4 .2017 கொடநாட்டிலுள்ள காவலாளி ஓம்பகதூர்  மர்மமான முறையில்  கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகு 28.4.2017 இரவு 8.15க்கு அங்கே ட்ரைவராக வேலைபார்த்த கனகராஜ் ஒரு விபத்தில் மரணமாகிறார். அடுத்த 24 மணிநேரத்திற்கு முன்பாக 29.4.2017 மாலை ஐந்து மணிக்கு கேரளாவில் சயன் என்பவர் விபத்தில் தன் குடும்பத்தை இழந்து அவர் மட்டும் தப்பிக்கிறார். 4.7.2107  தினேஷ்குமார் கொடநாட்டில் உள்ள சிசிடிவிக்கு இன்ச்சாரச். அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

 

இப்போது ஜனவரி 2019. இன்று சயன் என்ன சொல்கிறார் என்றால், எடப்பாடி பழனிசாமிதான் அங்கே இருக்கிற ஆவணங்கள், கணினி மென்பொருட்கள், விபரங்கள், பென்ட்ரைவ் போன்றவற்றை எடுக்க சொல்லியிருக்கிறார் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாகவும், கனகராஜும் நானும் செய்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

 

இந்த சம்பவத்தின்போது அங்கு ஒரு போலீசார் கூட இல்லாததன் காரணம் என்ன? நான் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த பொழுதுதான் உதகையில் அனுமதி பெற்று  கொடநாடு எஸ்டேட்டிற்கு என்று தனி மின் லைன் கொடுக்கப்பட்டது. சிறப்பு அனுமதியுடன் 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த  நேரத்தில் கரண்ட் போனதற்கு யார் காரணம். அங்குள்ள 24 சிசிடிவி கேமராவில் ஒரு கேமரா கூட அந்த குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாமல் போனது ஏன்?. என பல கேள்விகள் உள்ள நிலையில். அதே சயனும், வலையார் மனோஜ் அவர்களும் திட்டவட்டமாக இதற்கு பின்னால் எடப்பாடிதான் உள்ளார் என கூறியதன் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும்,120 பி கூட்டுச்சதி என்று சொன்னால், முதல் குற்றவாளி  முதல்வர் எடப்பாடிதான் என்பதுதான் எங்களின் நேரடியான குற்றச்சாட்டு. விசாரணை சயனிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  

 

எனவே இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும்  என்றார்.  

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Next Story

விஜய பிரபாகரனுக்கு எந்த தொகுதி; தேமுதிக அலுவலகம் வந்த எடப்பாடி

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Vijaya Prabhakaran in Virudhunagar; Edappadi came to the DMDK office

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக தான் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டார். இந்நிலையில் 18 இடங்களில் திமுக - அதிமுக நேரடியாக களத்தில் மோதவுள்ளது.

மேலும், அதிமுகவில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக போட்டியிடும் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தேமுதிக அலுவலகம் உள்ள கோயம்பேட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் வந்திருந்தனர்.