Skip to main content

தொகுதி இழந்த மாவட்டத்தில் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

   சுதந்திர இந்தியாவில் கட்டிடங்களையும் கஜானாவையும் கொடுத்து இணைக்கப்பட்ட புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பையும் பெற்றிருந்தது. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை தொகுதியை பறித்துக் கொண்டனர். இதனால் 2009 நாடாளுமன்ற தேர்தல் முதல் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கே வாக்களித்து வருகின்றனர். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்று குரல் எழுப்பிய மக்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் கடந்த இரு தேர்தல்களிலும் நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் பதிவானது. 

 

o


   இந்த நிலையில் 17 வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி, கரூர், சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் வேட்பாளர்கள்   அறிவிக்கப்படவில்லை. இதில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் திடீரென அவருக்கு வாக்கு சேகரிக்கும் விளம்பரங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவுகிறது.

 

o


 அதே போல மக்கள் நீதி மய்யம் சார்பில் கடைவீதிகள் தொடங்கி வீடு வீடாக துண்டறிக்கைகள் கொடுத்து களப்பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். தொகுதியை இழந்தாலும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

 

o


  அதே வேகத்தில் தொகுதியை மீட்க போராடும் இயக்கங்கள் இந்த முறையும் நோட்டாவுக்கு வாக்கு கேட்கும் பிரச்சாரத்தை சில நாட்களில் தொடங்க உள்ளனர். இந்த முறையும் நோட்டா வாக்குகள் தான் வெற்றிகளை மாற்றி அமைக்கும் என்கிறார்கள் இளைஞர்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.