Skip to main content

'உயிரிழந்த மருத்துவர் சண்முகபிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது' (படங்கள்) 

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகபிரியாவுக்கு  கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முகப்பிரியாவின் வீரமான, துணிவான, தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை சண்முகப்பிரியாவின் கணவர் சண்முக பெருமாள் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டது. திருச்சி ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக சிறந்த மருத்துவர் விருது சென்னை சேர்ந்த பத்மபிரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது நெல்லையை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணிக்கு வழங்கப்பட்டது.

 

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது 10 கிராம் தங்கம் மற்றும் சான்று அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக அரும்பணி ஆற்றிய ஆட்சியர்கள் இரண்டு பேருக்கும் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் விருது தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதில், ஆண்கள் பிரிவில் மூன்று பேருக்கும், பெண்கள் பிரிவில் மூன்று பேருக்கும் தரப்பட்டது. சென்னை-அரவிந்த் ஜெயபால், திருவாரூர்-பசுருதின், நீலகிரியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல்-மகேஸ்வரி, கடலூர்-அமலா ஜெனிபர் ஜெயராணி, சென்னை-மீனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சமூக நலனுக்கு சிறந்த சேவைக்காக பணியாற்றிய மருத்துவர் சாந்தி துரைசாமி அவ்வையார் விருது வழங்கப்பட்டது. சிறந்த மூன்றாம் பாலின விருதை திருநங்கை கிரேஸ் பானுவுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். சுதந்திர தின விழாவில் 3 பேருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. கிண்டி அரசு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் நாராயணசாமிக்கு முதல்வர் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.