Skip to main content

"கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடுக"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்! 

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

 

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். உளவுத்துறை சரியானபடி, தகவல் சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சி கலவரத்தைத் தடுத்திருக்க முடியும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு தடுமாறுகிறது தி.மு.க. அரசு. வன்முறையில் பள்ளியும், மாணாக்கர்களின் சான்றிதழ்களும் தீக்கிரையானதற்கு யார் பொறுப்பேற்பது? 

 

கனியாமூர் பள்ளி மாணாக்கர் கல்வியைத் தொடர்வது பற்றி அரசு வழக்கம் அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்