Skip to main content

ஜக்கி வாசுதேவ்வை அதிகார நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
ஜக்கி வாசுதேவ்வை அதிகார நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் ஜக்கையன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முற்றிலும் இலவசமான கல்விக்கான அரசு ஆணையை மாற்றி தற்போது ஐம்பது சதவிகிதம் மட்டுமே வழங்குவதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. வருகின்ற ஆண்டிலாவது நீட் தேர்வை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கைவிட வேண்டும்.

பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்த ஜக்கி வாசுதேவ்வை வன்மையாக கண்டிப்பதாகவும், பிஜேபி ஜக்கி வாசுதேவிற்கு யோகி ஆதித்தநாத்தைப்போல் அதிகார மையத்தில் அமர வைக்க முயற்சி நடப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். மாநில சுயாட்சியை பறிக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

அருள்

சார்ந்த செய்திகள்