Skip to main content

ஜெ.,நினைவு தினம் - டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் அஞ்சலி!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
ஜெ.,நினைவு தினம் - டிடிவி தினகரன்
ஆதரவாளர்களுடன் அஞ்சலி!




மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று டி.டி.வி.தினகரன், தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி இன்று மதியம் 12.45 மணி அளவில் திறந்த வேனில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டனர்.



இதனைத் தொடா்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளா்களான தங்கதமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக காவல்துறையினா் டிடிவி தினகரனின் ஆதரவாளா்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

படங்கள் - அசோக்குமார், குமரேசன்

சார்ந்த செய்திகள்