Skip to main content

ஆனந்தாஸ் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Income tax check on Anandas restaurants!

 

ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

 

கோவையை மையமாக கொண்டு உணவகங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகளை இயக்கி வரும் ஆனந்தாஸ் குழுமம், தமிழகம் முழுவதும் சுமார் 40- க்கும் மேற்பட்டஉணவகங்களை அமைத்துள்ளது. கோவையில் மட்டும் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், லட்சுமி மில்ஸ், ராம்நகர், காந்திபுரம், சுந்தரபுரம், அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் 9 உணவகங்களை நடத்தி வருகிறது. 

 

இந்த நிலையில், ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான அனைத்து உணவகங்களில் இன்று (28/05/2022) காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 40- க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

ஆனந்தாஸ் குழும உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்