Skip to main content

''இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழ்நாடே வளர்ச்சி பெறும்'' - முதல்வரை சந்தித்த பின் அன்புமணி பேட்டி

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

"If this society develops, Tamil Nadu will develop" - Anbumani told the meeting

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''1980ல் இருந்து 87 வரை பலகட்ட போராட்டங்களை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். அவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பிறகுதான் 1989இல் திமுக ஆட்சிக் காலத்தில் 20 விழுக்காடு எம்பிசி என உருவாக்கினார்கள். இப்பொழுது எங்களுடைய கோரிக்கை உள் ஒதுக்கீடு கொடுங்கள். எம்.பி.சியில் வன்னியர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. போராடியது உயிர்நீத்தது எல்லாம் வன்னியர் சமுதாயம். இதை ஒரு ஜாதி பிரச்சனையாக பார்க்கக் கூடாது. இது சமூகநீதிப் பிரச்சனை. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம், மிகப்பெரிய சமுதாயம் வன்னியர் சமுதாயம்.

 

இந்த சமுதாயம் வளர்ந்தால் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். இந்த சமுதாயம் கிட்டத்தட்ட வட மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டு காலமாக கல்வியில் பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரண்டாவது தேர்வில் கடைசி 15 மாவட்டத்தில் எங்கள் வட மாவட்டங்கள் இருக்கிறது. இது கான்ஸ்டண்டாக இருக்கிறது. ஏதோ ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல, 30 ஆண்டுகளாக கல்வியில் கடைசி 15 மாவட்டங்களில் வட மாவட்டங்கள்  இருக்கிறது. தமிழ்நாட்டில் அதிகம் குடிசைகள் உள்ள மாவட்டங்கள் வட மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்பு இல்லாத மாவட்டங்கள்; அதிகம் மது விற்பனை இருக்கின்ற மாவட்டங்கள் வட மாவட்டங்கள்; இதெல்லாம் சமூகத்தில் பின்தங்கி இருப்பதற்கான அறிகுறிகள். அதனால் இதை எல்லாம் வைத்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

 

கடந்த அரசு நடவடிக்கை எடுத்தார்கள். அதில் நீதிமன்றத்தில் சில குறிப்புகள் சொன்னார்கள். அந்த குறிப்புகள், குறைபாடுகளை நீக்கி புதிய சட்டம் கொண்டு வரலாம். கொண்டு வருவதற்கு எந்தத் தடையும் கிடையாது. இதை தமிழக அரசு உண்மையிலேயே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், கொண்டு வந்திருப்பார்கள். அதனால் எங்களுக்கு முதலமைச்சருக்கு, இதுகுறித்த எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பது எங்களுக்கு கேள்வியாக இருக்கிறது. அதனால்தான், இன்று அவரைப் பார்த்துவிட்டு வந்தோம். இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். பார்க்கலாம் என்ன பண்ணப் போகிறார்கள் என்று.

 

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 1980ல் இருந்து பாமக வலியுறுத்தி வருகிறோம். இதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்கள், ஆயிரக்கணக்கான அறிக்கைகள் எனப் பல முறை கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுவதற்கான காரணம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.