Skip to main content

ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?- விரிவான தகவல்!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

How to attend a medical consultation online? - Detailed information!

 

ஆன்லைன் மூலம் முதன்முறையாக நடைபெறவிருக்கும் பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 

 

அதன்படி, ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துக் கொள்வது எப்படி? என்று விரிவாகப் பார்ப்போம்!

 

tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, முதலில் கடவுச்சொல்லை மாற்றி அமைக்க, ரீசெட் பாஸ்வேர்டு என்பதை கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போது கொடுத்த கைபேசி எண்ணுக்கு 'OTP' வரும். அந்த 'OTP'-ஐ உள்ளீட்டு, புதிய கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

 

அடுத்ததாக, Login செய்து விண்ணப்பிக்கும் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரி (அல்லது) விண்ணப்ப எண் (அல்லது) விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய 'Login ID'-யை - பயன்படுத்தலாம். இவற்றை பயன்படுத்தி 'Login' செய்யும் போது, புதிதாக உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையலாம். உள்ளே சென்றவுடன் இடதுபுறம் செல்ப் டீடெய்ல்ஸ் என்ற தலைப்பின் கீழ் பெயர், பாலினம், சமூகம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். 

 

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான மையங்களைத் தேர்வு செய்யலாம். தங்களுக்கு அருகில் உள்ள மூன்று மையங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். 

 

அதன்பின், கலந்தாய்வு கட்டணமாக, ரூபாய் 500- ஐ பாரத ஸ்டேட் வங்கி (அல்லது) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் மூலம் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் கட்டி முடித்தவுடன், பதிவு செய்யும் நடைமுறை முடிவுக்கு வரும். 

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.