Skip to main content

உயிருக்குப் போராடியவர்களை மீட்ட தலைமைக் காவலர் உயிரிழப்பு; கலங்கிய போலீஸார்

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

 head constable who rescued those who were fighting for their lives was lost

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான முரளி. இவருக்குத் திருமணமாகி மனைவி சங்கீதா, 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆம்பூர், உமராபாத், வாணியம்பாடி ஆகிய இடங்களில் கிராமிய மற்றும் நகர காவல் நிலையத்திலும், மதுவிலக்கு அமல் பிரிவிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார். தற்போது வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார்.

 

நவம்பர் 10 ஆம் தேதி இரவுப் பணி பார்த்துள்ளார். நவம்பர் 11 ஆம் தேதி விடியற்காலை சென்னை டூ பெங்களூரூ நாற்கர சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் இறந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பேருந்துகளில் வந்த 50க்கும் மேற்பட்ட அடிப்பட்டவர்களை வாகனங்களில் ஏற்றி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அதிகமாக அடிப்பட்டவர்கள், இறந்தவர்கள் உடைமைகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

 

தலைமைக் காவலர் முரளிக்கு அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அங்கிருந்த சக காவலர்கள் அவரைக் காவல் நிலையத்தில் படுத்து ஓய்வெடுக்கச் செய்துள்ளனர். அவரும் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டு இருந்துள்ளார். ஒருமணி நேரம் கடந்து அவரது மொபைலுக்கு யாரோ கால் செய்துள்ளனர். அப்போது அது ரிங் ஆனதே தவிர எடுக்கவில்லை. இதனால் சக காவலர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்தபோது, எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். அவரின் நாடியை சோதித்தபோது அவர் உயிர் பிரிந்து இறந்து போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கும் அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்துள்ளனர். அவரது உடலை அரசு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

விபத்து நடந்த இடத்தினை பார்வையிட்ட வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, உயிரிழந்த தலைமைக் காவலர் முரளியின் உடலைப் பார்த்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.