Skip to main content

காரில் சென்றவர்களை தாக்கி பச்சை மரகத கல் பறிப்பு; திண்டுக்கல்லில் பரபரப்பு

Published on 02/08/2023 | Edited on 03/08/2023

 

Green emerald stone snatched after attacking car passers-by; The excitement in Dindigul

 

காரில் வந்தவர்களை தாக்கி பச்சை நிற மரகத கல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை விரகனூரை சேர்ந்தவர் அழகர். சிவகங்கையில் உள்ள அரசுப் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் இருந்த விலையுயர்ந்த பச்சை மரகத கற்களை எடுத்துக்கொண்டு அவருடைய நண்பர்கள் கண்ணன் மற்றும் ராமகிருஷ்ணன், அழகர் மணிகண்டன் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.

 

கார் திண்டுக்கல் பாலம் ராஜக்காபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது காரை ஓட்டிக்கொண்டிருந்த அழகர் மணிகண்டன் காரை நிறுத்தினார். அப்பொழுது அவர்களுக்கு முன்னால் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய நான்கு நபர்கள் அழகரையும் கண்ணனையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு அவர்கள் கையில் இருந்த இரண்டு பச்சை ரக உயர்ந்த மரகத கல்லை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் மரகத கற்களை பறித்துக்கொண்டு சென்ற 4 பேரை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்