Skip to main content

“உண்மையான பயனாளிகளுக்கு அரசுத் திட்டம் சென்று சேரவேண்டும்”-அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுரை

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

"The government should go and join the scheme for the real beneficiaries" - MLA to the authorities

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தமது தொகுதிக்கு உட்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, அவர் அதிகாரிகளிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக பல்வேறு திட்டப் பணிகளை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் மீண்டும் உயிர் கொடுத்து அதைச் சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கிராமத்தில் 100 சதவீத வளர்ச்சியை எட்டும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கிராமம் நகரத்துக்கு இணையாக அனைத்து வளர்ச்சியையும் பெறும். இதன் மூலம் கிராமம் தன்னிறைவு அடையும்.

 

அந்த வகையில் இந்தத் திட்டம் மெருகேற்றப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. அதே போல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அரசு அதிகாரிகள் இதுபோன்ற திட்டப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

 

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்ய கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி செயலர், மகளிர் திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பயனாளிகளைத் தேர்வு செய்யும்போது கட்சி பாகுபாடு இன்றி ஏழை எளிய மக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு இதன் மூலம் முன்னேற்றம் அடையும் பொருளாதார அடிப்படையில் அந்தக் குடும்பம் மேம்படும். அதன் அடிப்படையில் பயனாளிகள் பட்டியலைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

இதன் மூலம் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்குச் சென்றடையும். இதுபோன்ற திட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றிட அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என அதிகாரிகளுக்கு தனது அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ அதன்படி முறையான பயனாளிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.