Published on 19/08/2022 | Edited on 19/08/2022
அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக பயிற்சி மருத்துவர் காயத்ரி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவக் கல்லூரியில் நடந்த இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.