Skip to main content

புகையிலை பொருட்களை விற்பனை செய்த உணவகங்களுக்கு அபராதம்!

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Food businesses fined for selling tobacco products

 

திருச்சி பொதுமக்களின் புகாரையடுத்து திருவானைகோயில் பைபாஸ் மற்றும் தெப்பக்குளம் அருகில் உள்ள நந்தி கோயில் தெரு பகுதியில் சுமார் 10 உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. 

 

அதில் ஐந்து கடைகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு சுமார் 16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 

 

Food businesses fined for selling tobacco products

 

மேலும், மூன்று கடைகளுக்கு Compound Offense தலா ரூபாய் 5,000 என மொத்தம் ரூபாய் 15,000 அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கடைகள் மீது வழக்கு தொடுப்பதற்காக நான்கு உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்