Skip to main content

தமிழ்நாடு காவல்துறையில் புரட்சி! சென்னையில் ஊர்க்காவல் படையினர் போராட்டம்

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
p

 

தமிழ்நாடு காவல்துறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.   சென்னையில் இன்று ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாகவும் முடிவெடுத்துள்ளனர்.

 

p

 

p

 

தெலுங்கானா தேர்தலை முன்னிட்டு அங்கே தேர்தல் பணிக்காக 5 நாட்கள் ஊர்க்காவல் படையினர் அனுப்பப்பட்டார்கள்.   தெலுங்கானாவில் பணி முடிந்ததும் இன்று காலையில் சென்னை திரும்பிய அவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு வந்தனர்.  5 நாள் வேலைக்காக ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும்.   அந்த சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படாததால் திடீரென சாலையில்  அமர்ந்து போராட்டத்தை துவங்கினர்.  மதியம் துவங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது.  தமிழ்நாடு காவல்துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை.   2500 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

 

pp

 

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ளது போல் பணி நிரந்தரம் வழங்க வேண்டும், போலீசுக்கு உரிய மரியாதையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷமாக  எழுப்பினர்.  நிலைமை மோசமாவதை உணர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டக்காரர்களூடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தனர்.

 

pp

 

இப்போதைக்கு ஊர்க்காவல் படையினர் போராட்டத்தை கைவிட்டாலும்,  தமிழ்நாடு முழுவதிலும் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துச்செல்லும் முடிவில் இருக்கின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சைலேந்திரபாபு ஓய்வும் சங்கர் ஜிவால் பதவியேற்பும் (படங்கள்)

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காவல்துறை தலைமையகத்தில் சைலேந்திரபாபு புதிதாகப் பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 

 

இதையடுத்து காவல்துறை சார்பில் அவரை காரில் அமர வைத்து புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். பின்னர் ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. காவலர்கள் அணிவகுப்பு நடத்தி சைலேந்திர பாபுவுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள சங்கர் ஜிவால் சைலேந்திர பாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கலந்துகொண்டு சைலேந்திரபாபு அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.

 

 

Next Story

யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய பீகார் விரைந்தது தமிழக தனிப்படை  

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

 Tamil Nadu special force rushes to Bihar to arrest YouTuber Manish Kashyap

 

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. இதனிடையே பீகாரில் இருந்து வந்த குழு ஒன்று இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கேட்டறிந்தது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

 

தமிழ்நாடு காவல்துறை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பதிவிட்டவர்களை சைபர் க்ரைம் பிரிவினருடன் இணைந்து கண்டறிந்து கைது செய்து வந்தது. அதேபோல், பீகார் அரசும் போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வந்தது.

 

தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமா ஷூட்டிங் போல் செட் அமைத்து வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது போல் நடிக்க வைத்து வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து பரப்பியது அம்பலமாகியது. இந்நிலையில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய தமிழக காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவரை கைது செய்ய தமிழக தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர். பீகார் சிறையில் உள்ள யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை மதுரை கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக போலீசார் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.