Skip to main content

சென்னை ரயில் விபத்தில் 5 பேர் பலியான பரிதாபம்- அதிகாரிகள் மீது பயணிகள் ஆவேசம்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
train

 

பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்லுவோரின் எண்ணிக்கையினால் சென்னையில் ரயில்களில் வழக்கமாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.   காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுவாகவே கூட்ட நெருக்கடி இருக்கும்.   இந்நிலையில் வழக்கமாக வரும் ரயில் கொஞ்சம் தாமதம் ஆனால் கூட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள்.  

 

இப்படி இருக்கும்போது இன்று கோடம்பாக்கத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில்கள் இயக்குவதில் தாமதாம் ஆனது.   இந்த சமயத்தில் சென்னை எழும்பூரில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் கூட்ட நெருக்கடி அதிகமாக இருந்தது.   பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும்.  காத்திருந்த பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏற முற்பட்டனர்.   இதில் பலர்  படுகாயம் அடைந்தனர்.   மேலும் பலர் ரயிலில் உள்ளே செல்ல இடம் இல்லாததால் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றனர்.  ரயில் புறப்பட்டதும்  படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள் தடுப்புச்சுவற்றில் மோதினர்.  இதில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  படுகாயம் அடைந்தோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று இரவும் இதே கூட்ட நெருக்கடியால் இதே இடத்தில் 2 பேர் பலியானார்கள்

 

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரயில் இயக்காமல் இருந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்தனை உயிர்கள் பறிபோய்விட்டதாக சக பயணிகள் அதிகாரிகள் மீது ஆவேசமாக கூறினார்கள்.    
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிவேக விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
High speed train derailment accident in rajasthan

பர்மதி - ஆக்ரா விரைவு ரயில், குஜராத் மாநிலத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று (17-03-24) மாலை புறப்பட்ட இந்த ரயில், நள்ளிரவு ஒரு மணியளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ரயில் தடம் புரண்டது. அதில், ரயில் எஞ்சினுடன் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்த விபத்து குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விபத்து குறித்து வடமேற்கு ரயில்வே மண்டலம் தெரிவிக்கையில், ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தால், ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்படுகிறது. மேலும், ரயிலில் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள 0145-2429642 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரயிலில் பயங்கர தீ விபத்து; விரைந்த தீயணைப்புத் துறையினர்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Terrible train fire in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நான்டெட் நகரில் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில், பூர்ணா - பார்லி வழிச் செல்லும் ரயில் (வண்டி எண் : 07599) நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ரயிலில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடத்திற்கு மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து, மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.