Skip to main content

ஆட்சியரகத்தில் நடந்த பொங்கல் விழாவில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்; நாகை பரபரப்பு

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

incident in nagai

 

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கல் விழா கொண்டாடிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகள் மத்தியில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

 

கோவை மாவட்டம் பீளமேடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் பட்டதாரிப் பெண் அனுசுயா. அவருக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம், வடக்கு வீதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்திற்கும் இடையே முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணமும், ராயல் என்ஃபீல்ட் பைக்கும், 5 பவுன் தங்க நகைகளையும் டவுரியாக வாங்கியிருக்கிறார் மாரிசெல்வம்.

 

இதற்கிடையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி என்கிற பெண்ணை ஷேர் சாட் மூலம் காதல்வயப்படுத்தி, அந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கையில் இருக்கிறார் மாரிச்செல்வம்.

 

இதையறிந்து பதறிப்போன பட்டதாரிப் பெண்ணான அனுசுயா தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்த மாரிச்செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களிடமிருந்து  டவுரியாக பெற்ற பணம் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

incident in nagai

 

இந்த புகாருக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காமல் அலைகழிக்க விட்டதால் விரக்தியான பாதிக்கப்பட்ட பட்டதாரிப் பெண் அனுசுயா தனது பெற்றோர்களுடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றியபடியே தீக்குளிக்க முயற்சித்தார். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் கூடிநின்று பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டிருந்தனர், அந்த நேரத்தில் அனுசியா தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

incident in nagai

 

இதையடுத்து பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை மாவட்ட ஆட்சியரக ஊழியர் செந்தில் என்பவர் பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அங்கு வந்த நாகூர் போலீசாரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அனுசியாவிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

 

incident in nagai

 

இதுகுறித்து அனுசியா கூறுகையில், "எனக்கு இழைத்த கொடுமை, இனி எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது, அவனுக்காக பல அவமானங்களை சந்திச்சிட்டேன். பல இடங்களில் கடன்வாங்கி கொடுத்துவிட்டேன். எனது வாழ்க்கையை பாழாக்கிவிட்டான். அடுத்தவர்களிடம் அவனுக்கு வாங்கிக்கொடுத்த பணத்தையாவது எனக்கு பெற்றுதரவேண்டும். அவன் இனி யாரையும் ஏமாற்றாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.