Skip to main content

மீனவக் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1000 வேண்டும் - கோரிக்கையை முன் வைத்த மீனவர்கள்.!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

 

f2

     

சிறையிலுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப பாதுகாப்பு நிதியாக தினசரி ரூ.1000மாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன் வைத்துள்ளனர் இராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர்.

 
   ராமநாதபுரம் மாவட்டம் கடல்தொழிலாளர் சங்கத்திடமிருந்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ்விடம் வைத்த கோரிக்கையிலிருந்து., " சீன இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுக்க தவறியதால் இன்று ஒத்தை மடியை பயன்படுத்தி மீன்பிடிக்க இயலாது போய்விட்டது. இதனால் ஒட்டு மொத்த மீன்பிடி தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் வேறு வழியின்றி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறிப்பாக பாரம்பரிய மீன்பிடிப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் அதிக அளவில் அரபு நாடுகளுக்கு சென்று எவ்வித தொழில் பாதுகாப்பும் சட்ட பாதுகாப்பும் இன்றி தொழில் செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.  இதுபோன்ற சூழலில் மீன்பிடி ஒப்பந்த கூலிகளாக கடந்த 01/09/2018 அன்று அரபுநாடான துபாய் நாட்டில் சுமைராஎன்ற இடத்தில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவை சேர்ந்த 5 மீனவர்களும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணத்தை சேர்ந்த ஒரு மீனவருமாக 6 மீனவர்கள் கடலுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டு அவர்கள் சென்ற படகிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர் .

 

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசானது அவர்கள் குடும்ப வறுமை நிலையை கணக்கில் கொண்டு அவர்கள் சிறையில் இருக்கும் காலத்திற்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக நாளொன்றுக்கு ரூபாய் 250வீதம் வழங்குகிறது. ஆனால், பெருமளவில் பணம் செலவு செய்து விசா பெற்று அரபு நாடுகளுக்கு தொழில் செய்ய செல்லும் நம் மீனவர் குடும்பத்தினருக்கு இதுபோன்று குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க படுவதில்லை.2013 முதல் 2016 முதல் முன்னாள் முதல்வர் அவர்கள் இதுபோன்று பாதிப்புக்குளான மீனவர் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதல் 5.லட்சம் வரை சிறப்பு நிவாரண நிதியாக வழங்கி உதவினார். ஆனால் அவர்கள் மறைவுக்கு பிறகு இது போன்ற சிறப்பு நிதி வழங்கபடுவதில்லை. கேட்டால் மத்திய அரசின் தணிக்கை துறை இதை அனுமதிக்கவில்லை என்று சொல்கின்றனர். ஜெ-வின் ஆட்சி நடத்துவதாக கூறுபவர்களால் ஜெ. வழங்கியது போன்று வழங்க இயலாமல் போனது ஏன் என்று புரியவில்லை. குறைந்த பட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதமாவது வழங்க வேண்டும் . அதுவும் ஜெ.  அவர்கள் மறைவுக்கு பிறகு இது போன்று கைது நடவடிக்கைக்கு உள்ளாகி விடுதலையான மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.. இதனை தமிழக அரசும் தமிழக மீன்வளத்துறையும் இதை பரிசீலிக்க வேண்டுமெனவும்" வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.