Skip to main content

பிரபல நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கில் ஆகஸ்ட் 2ஆம் தேதி தீர்ப்பு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
The famous neurologist  murder case judgement will be on August 2

 

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி  சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த 2013 செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார்.  தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் ஆகிய  10 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

குற்றம்சாட்டப்பட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் இன்ஜனியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர்  ஆஜரானார்கள். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

 

173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. சாட்சி விசாரணை மற்றும் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஆகஸ்ட் 2ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை முதலாவது கூடுதல் அமர்வு  நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்