Skip to main content

 தொகுதி அறிவோம்-இடைத்தேர்தல்:சோளிங்கர் தொகுதி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயம், நெசவாளிகளை மட்டும்மே கொண்ட தொகுதி சோளிங்கர். மாவட்ட தலைநகரத்தில் இருந்து தொலைவில் உள்ள தொகுதியது. தொகுதியில் வன்னியர்கள், தலித்கள், முதலியார் சாதியினர் பெரும்பான்மையாக உள்ளனர். சாதி பாசம் புரையோடிப்போன மக்கள் அதிகளவில் இந்த தொகுதியில் அன்று முதல் இன்று வரை வாழ்கிறார்கள். தேர்தல் களத்தில் சமுதாயமே வெற்றியை தீர்மானிக்கிறது.

 

election

 

1952 பொதுவுடமை கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம், 1957ல் காங்கிரஸ் பாஸ்கர், 1962 காங்கிரஸ் பொன்னுரங்கம் என்பவர் எம்.எல்.ஏக்களாக இருந்தனர். 1967ல் திமுகவை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் வெற்றி பெற்றார். 1971ல் காங்கிரஸ் பொன்னுரங்கம் வெற்றி பெற்றார். அதிமுக தொடங்கப்பட்டதும் நிலைமை தலைகீழானது. 1977ல் ராமசாமி, 1980ல் சி.கோபால், 1984ல் சண்முகம் என தொடர்ச்சியாக அதிமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

 

 

 

1989ல் காங்கிரஸ் முனிரத்தினம், 1991ல் காங்கிரஸ் முனிரத்தினம், 1996ல் தமாக சார்பில் முனிரத்தினம், 2001ல் அதிமுக வில்வநாதன், 2006ல் அருள்அன்பரசு, 2011ல் தேமுதிக மனோகர், 2016ல் அதிமுக பார்த்திபன் வெற்றி பெற்றனர்.

 

 

 

இந்த தொகுதியில் தங்களுக்கு சரியான நிர்வாகிகள் இல்லையென்பதால் கூட்டணிக்கு தள்ளிவிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது திமுக. அதனால் காங்கிரஸ் என்றால் முனிரத்தினம் குடும்பம், அதிமுக என்றால் கோபால் குடும்பம் என கோலோச்சுகின்றனர்.

 

election

 

இந்த தொகுதியில் வெற்றி பெற்ற 2006ல் வெற்றி பெற்ற அருள்அன்பரசு, 2011ல் வெற்றி பெற்ற மனோகரன் இருவரும் வெளியூர்க்காரர்கள் என்பதால் எதுவும் செய்யவில்லை எனச்சொல்லும் மக்கள். உள்ளூரை சேர்ந்தவர்களான காங்கிரஸ் முனிரத்தினம், அதிமுக கோபால், அவரது மகன் பார்த்திபன் வரை யாரும் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுப்படவில்லை என்பது குற்றச்சாட்டு. நரசிம்மர் கோயிலுக்கு ரோப்கார் அமைத்து தரவேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை. அது நிறைவேறாமலே உள்ளது. அதேபோல் போக்குவரத்து டெப்போ, பேருந்து நிலைய வரிவாக்கம் எதுவும் செய்யவில்லை என்கிறார்கள்.

 

 

 

இந்த 2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அசோகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுக சம்பத் என்பவரை நிறுத்தியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவான பார்த்திபன், தற்போது அமமுகவில் உள்ளார். அவர் அல்லது அவர் குடும்பத்தில் இருந்து ஒருவர் நிறுத்தப்படுவார் என்கிறார்கள்.

 

 

 

இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 59 ஆயிரத்து 869 பேர் உள்ளனர். திமுக முதலியார் சமுதாய வாக்குகளை குறிவைத்தும், அதிமுக வன்னிய சமுதாய வாக்கை குறிவைத்துள்ளது. 

 

 

சோளிங்கர் நகரில் பிரபலமான நரசிங்கபெருமாள் கோயில் உள்ளது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பதே நரசிங்கபெருமாள் கதை. அதுப்போல் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறவைக்க போகிறார்கள் என்பது மக்கள் மனதில் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.