Skip to main content

எட்டு வழி பசுமை சாலை கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் கைது

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

எட்டு வழி பசுமை சாலை குறித்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என காவல்துறையினர் நேற்று இரவு முதலே கெடுபிடி செய்ய தொடங்கினர். இந்த கூட்டத்திற்கு இடதுசாரிகளின் விவசாய அமைப்பைச் சேர்ந்த அகில இந்திய துணைத் தலைவர் விஜி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இவர்களும் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனை மறுத்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

 

இதனால் கூட்டம் நடைபெற இருந்த தனியார் ஆலைக்கு சென்ற போலீசார், அதன் உரிமையாளரை மிரட்டியதால் அவர் கூட்டம் நடத்த இடம் தரவில்லை. இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட சிபிஎம் அலுவலகத்திலேயே கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

 

 

இதில் கலந்து கொள்ள திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகரை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களை எந்த தகவலும் சொல்லாமல் போலீசார் வழியிலேயே மடக்கி கைது செய்தனர். இந்த தகவல் தாமதமாகவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு தெரிந்து காவல்துறையினரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் போலீசாரோ, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
 

இதற்கிடையே காலை 11.30 மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த கலசப்பாக்கம் தாலுக்கா, காம்பத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன், ராம்கான், செல்வராஜ், விஜி, பவன்குமார், ஏழுமலை, அண்ணாதுரை போன்றவர்களை போலீசார் கைது  செய்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர்.

 

 

 

இதுதொடர்பாக நாம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகத்திடம் கேட்டபோது, தகவல் எதுவும் கூறாமல் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்தவர்களை கைது செய்வது கண்டனத்திற்கு உரியது என்றார். மேலும், எட்டு வழிச் சாலை தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. மக்கள் களத்திலேயே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த சாலை முழுக்க முழுக்க கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கார்ப்பரேட்டுக்களுக்காக அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.