Skip to main content

கோவையில் சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும்... திமுக போராட்டம்: பலர் கைது!

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

 

கோவை மாநகரில் சீராக குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன் உள்ளிட்ட பலர்  கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்