Skip to main content

முதல்வர் திறந்த பாலம், 4 மாதத்தில் உடைந்த சாலைகள்! திமுக மாசெக்களை ஆய்வுக்கு அனுப்பிய ஸ்டாலின்!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள  பேயாடிக்கோட்டையிலிருந்து திருவாடனை செல்லும் பாம்பாற்றுபாலம் மற்றும் இணைப்புச் சாலை, சாலைத் தடுப்புகள் நபார்டு நிதி ரூ. 5.70 கோடியில் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

 

அந்த சாலை மற்றும் சாலை தடுப்புகள்  4 மாதத்தில் மோசமாகி வெடித்துள்ளது.

 

இந்த மோசமான கட்டுமானப் பணிகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி  திமுக முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான ரகுபதி எம்.எல்.ஏ மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், அறந்தாங்கி மாஜி உதயம் சண்முகம் ஆகியோர் திமுக பிரமுகர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டனர்.

 

dmk

 

அப்போது மாவட்டப் பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ..  தமிழக முதல்வரால் கடந்த நான்கு மாதத்திற்கு முன் திறக்கபட்ட பாலம் மற்றும் இணைப்புச் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. 

 

ஆளும் அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கமிசன், கலெக்சன், கரப்சன் என்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர்.

 

இந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு பாலங்களை ஆராய்ந்து முழு அறிக்கைகளை திமுக தலைவரிடம் கொடுக்க உள்ளோம். மேலும் தேவைப்பட்டால் ஆட்சியின் ஊழலைப் பற்றி நீதிமன்றத்தை நாடி எல்லாமே மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிற ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீதிமன்றத்தின் மூலம் திமுக தலைவர் நிருபித்து காண்பிப்பார் என்றார்.

    

bridge

 

அங்கு நின்ற திமுகவினர் கூறும் போது.. முதல்வர் எடப்பாடி பெரிய வேலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை சிபிஐ விசாரனை செய்ய உள்ளது. அதனால் அவர்களால் முறையற்று நடந்துள்ள பணிகள் பற்றிய விபரங்களை தளபதி வாங்கி வருகிறார். அதில் ஒன்று தான் பேயாடிக்கோட்டை பாலம். இது பற்றி முழு விபரங்களும் வேண்டும் என்று தளபதி கேட்டதால் மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில் பார்த்துள்ளனர். இன்று தஞ்சை வரும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுக்கப்படும் இந்த அறிக்கையை வைத்து அவர் மேல் நடடிக்கைக்கு போக தயாராகி உள்ளார் என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.