Published on 29/08/2019 | Edited on 29/08/2019
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் அனைத்து எம்பிக்களும் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் எம்பிக்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும். அதே போல தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என்று தெரிவித்தார்.