Skip to main content

அதிர்ச்சியான தகவல்களைச் சொன்ன தனபால்! 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Dhanapal gave shocking information!

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகிறது. இதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடம் சிறிதுகாலம் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். இவரது அண்ணன் தனபால், சமீபகாலமாக இந்த வழக்கில் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், அவரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதனை ஏற்று இன்று கோவையில் உள்ள சி.பி..சி.ஐ.டி. அலுவலகத்தில் கனகராஜின் அண்ணன் தனபால் ஆஜராக வந்தார். 

 

அப்போது கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனகராஜ் சகோதரர் தனபால், “கொடநாடு வழக்கு தொடர்பாக ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. தற்போது இது சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. அந்த விசாரணைக்கு இன்று ஆஜராகுகிறேன். என் தம்பி அங்கு நடந்த அனைத்தையும் சொல்லியுள்ளார். இதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பட்டியலிட்டு வைத்துள்ளேன். 

 

இதில் நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரும், சில கூலிப்படைகளும், சில காவல்துறையினரும் உள்ளனர். சங்ககிரியில் எடப்பாடியின் மச்சான் வெங்கடேசனிடம் கொடுக்கும்போதும், சேலம் இளங்கோவனிடம் கொடுக்கும்போது சிலர் அங்கு இருந்துள்ளனர். எடுத்ததை கொடுத்துவிட்டு, பேசிய பணத்தை கேட்டபோது தம்பியை தாக்கியுள்ளனர். 

 

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து எங்கள் சமுத்திரம் கிராமத்தில் இவர்கள் எல்லாம் மது அருந்துகிறார்கள். அதில், விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த என் தம்பி அங்கிருந்து தப்பிவிடுகிறார். மறுநாளான வெள்ளிக்கிழமை இளங்கோ இருக்கும் ஆத்தூருக்கு வந்து பணம் வாங்கிக்கும்படி சொல்லியுள்ளனர். அப்போது அயோத்திப்பட்டினம் எனும் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மது அருந்தியுள்ளனர். அதில் அதிமுகவின் முக்கிய நபர்கள் இருந்துள்ளனர். அங்கையும் அவன் தப்பிவிட்டான். இறுதியாக அவருக்கு அதிகளவில் மது கொடுத்து விபத்தை ஏற்படுத்தி ஆத்தூர் நெடுஞ்சாலையில் போட்டுவிட்டனர். இதனை அன்றிலிருந்து சொல்லிவருகிறேன். ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி மூலம் நியாயம் கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. 

 

மொத்தம் ஐந்து பேக் இருந்தது. அதில் மூன்று சங்ககிரியிலும், இரண்டு சேலத்திலும் கொடுக்கப்பட்டது. சங்ககிரியில் எடப்பாடியின் மச்சான் வெங்கடேசனிடமும், சேலத்தில் ஆத்தூர் இளங்கோவிடமும் கொடுக்கப்பட்டது. 

 

இதில், எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சஞ்சீவன், அனுபவ் ரவி, அன்பரசு, தப்புச்சி வினோத், ஆத்தூர் இளங்கோ ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் எனக்கு மருத்துவச் சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும் அல்லது என்னை மனநலம் பாதித்தவர் என சொல்பவர்கள் மருத்துவர்களாக இருந்து சான்றிதழ் கொடுத்திருக்க வேண்டும். 

 

இந்த விவகாரத்தில் முதலில் ஊட்டியிலும், பிறகு ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சேலத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, சேலத்தில் ஏ.டி.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் என்னையும் என் தம்பியையும் காலையில் அழைத்துச் சென்றனர். பிறகு மதிய உணவு கொடுத்துவிட்டு, ஐ.ஜி. என்னை கடுமையான முறையில் தாக்கினார். என்னால் வலி தாங்க முடியாமல் அழுதபோது 108-ஐ வரவழைத்து எனக்கு ஊசி செலுத்தினர். பிறகு ஒன்றரை நாள் திங்கள் கிழமை காலை வண்டி ஏறும் வரை என்ன நடந்தது என இது வரை எனக்கு தெரியவில்லை. அதேபோல், அந்த ஒன்றரை நாளில் என்னிடம் என்னென்ன எழுதி வாங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை. 

 

இதில், ஐ.ஜி. சுதாகர், சேலம் எஸ்.பி, ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார், முத்துமாணிக்கம் எனும் அதிகாரி இவர்களை எல்லாம் விசாரித்தால் எல்லாம் தெரியவரும். அதேபோல், 2017க்கு பிறகு கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கவனிக்க வேண்டும். அதேபோல், இதில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 

 

தடயங்களை அழித்ததாக என்மீது ஐ.ஜி. சுதாகர்தான் வழக்குப் பதிவு செய்கிறார். உண்மையில் எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ் குமார் மற்றும் முரளி ரம்பா ஆகியோர் என் வீட்டை சோதனை செய்ய வரும்போது என்னிடம் போன் கேட்டார்கள். அதனை அவரிடம் கொடுத்துவிட்டேன். ஐ.ஜி. சுதாகருக்கு ஒரு வீக்னஸ் இருக்கிறது. அதனை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவும், எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமாரும் இணைந்து சுதாகருக்கு செய்துகொடுத்து, என் மீது அந்தக் குற்றச்சாட்டை மாற்றிவிடுகின்றனர். இது அனைத்தையும் சொல்லப்போகிறேன். சி.பி.சி.ஐ.டி.க்கு முழு ஒத்துழைப்பு தர தயார்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.