Skip to main content

என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு! 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

cuddalore district neyveli nlc boiler incident


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி எனத் தென்மாநிலங்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
 


இந்நிலையில கடந்த  (07.05.2020) மாலை இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6-இல் நிலக்கரி  எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் 8 பேர் பலத்த தீக்காயங்களுடன் என்.எல்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அதில் கடந்த 08.05.2020 அன்று நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவரும், 10.05.2020 அன்று சண்முகம் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், 12.05.2020 அன்று தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நிரந்தரத் தொழிலாளி பாவாடை (45) என்பவரும், 13.05.2020 அன்று பாலமுருகன் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
 

cuddalore district neyveli nlc boiler incident

 


இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இன்கோசேர்வ் தொழிலாளி அன்புராஜ் என்பவர் சிகிக்சை பலனின்றி இன்று (19/05/2020) காலை உயிரிழந்தார். மேலும் 3 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 பேருக்குத் தீக்காயம் பட்டதில் 2 நிரந்தரத் தொழிலாளி, 2 ஒப்பந்தத் தொழிலாளி, ஒரு இன்கோசெர்வ் தொழிலாளி என அடுத்தடுத்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் சக தொழிலாளர்களும், நெய்வேலி மற்றும்  சுற்றுப்பகுதியினரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்