Published on 06/04/2020 | Edited on 06/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
![cm palanisamy discussion with district collectors](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZGh3ECiZdDvzYaj2V_Xl1SdQuOVsPDvMyo0iYPlBZWs/1586149026/sites/default/files/inline-images/cm4444_0.jpg)
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் உடனான ஆலோசனையில் மாவட்டக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.