Skip to main content

பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் தனிமை… மாமூல் வேட்டை! எஸ்.ஐ. உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்!!

Published on 09/11/2021 | Edited on 10/11/2021

 

salem police commissioner order police suspended

 

சேலத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு தனிமையில் இருந்ததுடன், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை எஸ்.ஐ. உள்பட நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.  

 

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜ் மண்டல் (வயது 27) என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவர், தனது காதலனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகுநிலையம் மற்றும் மசாஜ் மையம் ஆகியவற்றை நடத்திவந்தார். 

 

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இவர், தன்னுடைய மசாஜ் மையத்தில் வேலை செய்துவந்த ஆண் ஒருவரையும், பெண்கள் மூவரையும் தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே தனியாக ஒரு அறை எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

அவரிடம் வேலை செய்துவந்த லப்லு, நிஷி ஆகிய இருவரும் தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். காதலர்களான அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேஜ் மண்டல் தனது மசாஜ் மையத்தில் அழகுக்கலை மற்றும் மசாஜ் சேவை அளிக்கும் போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது  தெரியவந்தது. 

 

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாலியல் தொழிலை ஒழிக்கும் வகையில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

 

அப்போது பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும், பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் பல புரோக்கர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தேஜ்மண்டலும் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர் அப்போது கைதாகாமல் தப்பிச் சென்றுள்ளார். 

 

இதன் பின்னணியில் சேலம் மாநகர போலீசார் சிலர் தேஜ்மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருப்பதும், அவ்வப்போது அவருடைய மசாஜ் மையத்தில் உள்ள பெண்களுடன் தனிமையில் இருந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இத்தகவல்கள், சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நடத்திய விசாரணையில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ. ஆனந்தகுமார், சிறப்பு எஸ்.ஐ. சேகர், காவலர் கலைச்செல்வன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் செய்யும் பெண்களுடன் தனிமையில் இருந்ததும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

 

இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, சமூக விரோத செயல்களுக்குத் துணை போனதாக எஸ்.ஐ. ஆனந்தகுமார் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். 

 

இச்சம்பவம், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.