Skip to main content

அம்பேத்கருடன் களமிறங்கிய சிறுவர்கள்..! 8வது நாளாக தொடரும் போராட்டம் (படங்கள்)

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை  கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டன் தீவிரமடைந்தது.  அன்றுமுதல் தொடந்து வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டம் இன்றோடு 8வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் சிறுவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராசர் உள்ளிட்ட தலைவர்கள் படங்களுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பாதாகைகளைப் பிடித்தவாறு பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்