Skip to main content

சென்னை சிலை கடத்தல் வழக்கு;அனைவரும் நேரில் ஆஜராக நோட்டீஸ்!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

சென்னையில் பழமையான சிலைகளை பதுக்கி வைத்திருந்தது வழக்கில்  14 பேருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

 இதில் 11 பேர் வழக்கறிஞர் மூலம் அதற்கான மனுவை அளித்தபோது, அதனை போலீஸார் ஏற்க மறுத்து, சம்மன் பெற்றுக் கொண்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர்.

 

statue

 

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர்ஷா, பழமையான  சிலைகளை விற்பனை செய்தது தொடர்பாக சிலைகடத்தல் மன்னன் தீனதயான் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து அவரது வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது பழமையான கலைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கியதூண்கள், உலோகசிலைகள், கற்சிலைகள் என 267 சிலைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரன்வீர்ஷாவின் தோழி சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட்டைச் சேர்ந்த கிரண்ராவ் என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் 23 கற்சிலைகள் பூமிக்கடியில் புதைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

 

இதையடுத்து ரன்வீர்ஷா,  கிரண்ராவ் மற்றும் அவர்களின் பணியாளர்கள் செந்தில்விநாயகம், ரஞ்சித் சன்வால், அருண்கிறிஸ்டி, ராஜேஷ், அஜி, தயாநிதிஸ்வைன், பிரகாஷ், சிவா, தேவேந்திரன், சதிஷ், ராஜி்வ்தேவ், நரேன் உள்ளிட்ட 14 பேருக்கு, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 9 ம் தேதி நேரில் ஆஜராகசம்மன் அனுப்பியிருந்தனர்.

 

statue

 

இதற்கிடையில் கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகமாக மாற்றி அதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர். நேற்று காலை முதல் அந்த அலுவலகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஏஜி.பொன்மாணிக்கவேல், டிஎஸ்பி சுந்தரம் மற்றும் போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது கிரண்ராவ் பணியாளர்கள் சார்பில் 11 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் சரவணன், செல்வம் ஆகியோர் "கும்பகோணம் அலுவலகம் தொலைவில் உள்ளதால், எங்களுக்கு சென்னையில் விசாரித்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என மனுக்களை வழங்க வந்தனர்.

 

அவர்களிடம் டிஎஸ்பி சுந்தரம், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் கும்பகோணம் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே அவர்கள் இங்கு தான் ஆஜராக வேண்டும். எனவே, நீங்கள் வழங்கும் மனுவை நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என வழக்கறிஞர்களிடம் தெரிவித்து, அவர்களை திருப்பி அனுப்பினார். பின்னர் நரேன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஆஜராகினார். அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

 

statue

 

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி பிஏ.சுந்தரம் செய்தியாளர்களிடம் "சென்னையில் ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது வீட்டில் பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களிடமும், அவரை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்த 14 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

 

கும்பகோணம் அலுவலகத்தில்தான் அவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறி்ப்பிட்டுள்ளோம். ஆனால் சிலர் கும்பகோணம் வரமுடியவில்லை என மனுவாக வழக்கறிஞர் மூலம் அளிக்க வந்தனர். அதனை நாங்கள் பெறாமல் நிராகரித்துவிட்டோம். இன்று (9 ம் தேதி ) வர முடியாதவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். இதில் நரேன் என்பவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது  என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திருமணத்தை மீறிய உறவினால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to children caused by extramarital affairs in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபா (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளியே சென்றிருந்த தீபாவின் கணவர் மாலை வீடு திரும்பினார். அப்போது, தீபாவின் கணவர் தனது குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும், அவர்களை எழுப்ப வேண்டாம் என்றும் தீபா கூறியுள்ளார். இதனை கேட்ட தீபாவின் கணவர், அவர்களை எழுப்பாமல் இருந்துள்ளார்.

பின்னர், வெகுநேரம் ஆகியும் எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்த தீபாவின் கணவர், குழந்தகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு, குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து போன 2 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பிரேத பரிசோதனையில், குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அதில், தீபா போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், தீபாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தீபாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து, அந்த இளைஞருடன் வாழ நினைத்த தீபா, அதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். இதனால், காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன், திரும்பி வருவதற்குள் தனது குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீபா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.