Published on 10/01/2020 | Edited on 10/01/2020
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகள் நாளை (11.01.2020) இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் 2- ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4- ஆம் தேதி திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.