Skip to main content

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
chennai mtc bus no 102 incident

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 ஆம் எண் கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடுவழியிலேயே இந்த பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் பேருந்தின் மற்ற பகுதிகளில் மளமளவென தீப்பிடித்து. இதனால் பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைந்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்; தீயாகப் பரவிவரும் வீடியோ!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 youths are intoxicated with cannabis in Palani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சில இளைஞர்கள் போதையில் மிதப்பது போல் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை பயன்படுத்தி அதன் மூலம் போதை ஏறி பூங்காவில் விழுந்து கிடப்பது போல  வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்துவது மற்றும் பொது இடத்தில் விழுந்து கிடப்பது போன்று வீடியோ பதிவிட்ட இளைஞர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.  அதைத் தொடர்ந்து பழனி நகர டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே பழனி  நகரில் உள்ள அடிவாரம், பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன் உள்பட சில இடங்களிலும் அதுபோல் பழனியைச் சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரபட்டி உள்பட சில இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.  

 youths are intoxicated with cannabis in Palani

இது சம்மந்தமாக பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, “அந்த  வீடியோ குறித்து விசாரணை செய்து, அந்த இளைஞர்களைத் தேடி வருகிறோம். கூடிய விரைவில் கைது செய்வோம். இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று பேரை ஏற்கனவே கைது செய்து இருக்கிறேன். மேலும் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவலும் வந்திருப்பதால் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து  சமூக விரோத செயலில் ஈடுபடும் அந்தக் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இருப்பினும், பழனியில் இதுபோன்ற வீடியோ எடுத்து இளைஞர்கள் இணையத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி, கொடைக்கானலில் பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க எஸ்பி பிரதீப் அதிரடி நடவடிக்கை  எடுத்திருந்தார். அதுபோல் தற்போது பழனி மட்டுமல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  பல பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இது சம்மந்தமாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரும் மாவட்ட எஸ்.பி.பிரதீப்பிடம் தொடர்பு கொண்டு பழனி உட்பட சில இடங்களில் கஞ்சா  விற்கப்படுவதாக தகவல் வருவதால் அதை ஒடுக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.