Skip to main content

சென்னை ஐ.ஐ.டி.யில் கிடுகிடுவென உயரும் கரோனா!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

chennai iit students 8 more positive cases coronavirus

 

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 8 பேருக்கு மருத்துவ பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானதால், ஐ.ஐ.டி.யில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. 

 

இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், 'அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் உள்பட 550 பேருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 6 பேருக்கு கரோனா உறுதியானது. சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. 20- க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் எந்த இடமாக இருந்தாலும் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததே கரோனா பரவலுக்கு காரணம்.' எனத் தெரிவித்தார். 

 

1,104 நபர்களுக்கு ஐ.ஐ.டி. வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 8 பேருக்கு கரோனா உறுதிச்செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்