Skip to main content

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Chance of heavy rain in 10 districts

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

ஏற்கனவே தமிழகத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு  வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை கோவை, நீலகிரியில் கனமழைக்கும், நாளை மறுநாள் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும். அதற்கு அடுத்த நாள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்