Skip to main content

நிர்மலாதேவி ரசிகன் ஒரு விளம்பரப்பிரியர்! -நாம் தமிழர் கட்சியினர் விளக்கம்!!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

கடந்த 4-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி வந்திருந்தபோது, அவரைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார் உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன். நிர்மலாதேவியின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் நகரச் செயலாளராக இருக்கிறேன் என்று உரத்துச் சொன்னார். அதை நாம் அவருடைய படத்தையும் போட்டு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

 

fake

 

இந்தச் செய்தியைப் படித்த நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் அ.ராஜா நம்மைத் தொடர்புகொண்டு “அந்த அன்பழகன் ஒருமாதிரியான ஆள். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உசிலம்பட்டி  வந்திருந்த தலைவர் சீமானுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மற்றபடி, அவருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எப்படியாவது விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு திரியும் அன்பழகன், டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடனும் போட்டோ எடுத்திருக்கிறார். இன்னும் சில பிரபலமான பெண்களுடனும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். நிர்மலாதேவியோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போடுதான் அன்று அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்.” என்றார். 

 

n

 

நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி நகரச் செயலாளர் என்று அன்பழகன் நம்மிடம் சொன்னபோது, மீடியா நண்பர்கள் பலரும் உடன் இருந்தனர். அந்த அன்பழகன் இப்போது ஏனோ ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்று நாம் தமிழர் கட்சியினரிடம் மறுத்துப் பேசியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத அன்பழகன், நகரச் செயலாளர் என்று பீலா விட்டிருக்கிறார்.   

 

fake

 

நிர்மலாதேவி ரசிகன் என்று கூறிக்கொள்ளும் அன்பழகன் இனியாவது கண்டபடி உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.