Skip to main content

பார்கவுன்சில் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடையை நீக்க கோரி வழக்கு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
mm

 

மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த முருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 28 ஆம் தேதி நடக்கிறது. அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவுப்படி,  இந்த தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனு தாக்கல் செய்து அதில் தகுதி பெற்ற வேட்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க கோரும் துண்டு பிரசுரங்கள், என்னை தேர்வு செய்தால், என பல தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது கூடாது. அதே போல் சமூக வலைதளங்களில் தங்களுக்கு வாக்களிக்கும் படி தகவல் பரப்புவது உள்ளிட்ட எவ்விதமான விளம்பரங்களும் மேற்கொள்ள கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி தேர்தல் விதிமுறை சட்டம் 2018 ன் படி  உத்தரவிட்டார்.

 

இந்த தடையால் பார் கவுன்சில் உறுப்பினர் தேர்வுக்காக வாக்களிக்க உள்ள வழக்கறிஞர்களுக்கு தகுதியான வேட்பாளர் யார் என தெரியாமல் போய்விடும். மேலும் இந்த தடை, அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்கள் வெளியிடுவது, சமூகவலை தளங்களில் ஆதரவு கோருவது உள்ளிட்ட. பிரசாரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விதித்துள்ள தடையை நீக்கி அல்லது ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது போது, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்ற பின்னணி, குற்றவியல் வழக்குகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் பார்வைக்காக வழங்கும் படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.