Skip to main content

தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்! 

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

A car caught fire on the national highway!

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை - சேலம் பிரிவு சாலையில் ஏ. குமாரமங்கலம் அருகில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

 

சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர், ஊட்டி செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர். இந்த காரை இன்தாஸ் என்பவர் ஒட்டி சென்றார். அதிகாலை நேரத்தில் குமாரமங்கலம் அருகில் உள்ள பள்ளி அருகே, சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்த டிரைவர், காரை சாலையோரம் ஓரம் கட்டி நிறுத்தினார். உடனடியாக காரில் இருந்த அனைவரும் காரை விட்டு கீழே இறங்கி தப்பித்துள்ளனர். கார் முழுவதும் தீ பரவி எரிய ஆரம்பித்தது. 

 

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப் பிடித்து எரிந்ததால் சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பின் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி தப்பித்தனர். 


தகவல் அறிந்த சம்பவத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், எரிந்த காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்