Skip to main content

 மதுபோதையில் வாய்காலில் விழுந்தவர் உடல் மீட்பு

Published on 23/10/2018 | Edited on 23/10/2018
m

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுலோச்சனா நகரை சேர்ந்தவர் கேசவன் என்பவருடைய மகன் மணி( 20). இவருடைய நண்பர் கீரப்பாளையம் மேலத்தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அஜித்குமார்(24) ஆகியோர் கடந்த 21-ந்தேதி  சிதம்பரத்தில் இருந்து கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் கிராமத்திற்கு  இருசக்கர வாகனத்தில் சென்று  திரும்பியுள்ளனர். வாகனத்தை மணி ஓட்டியுள்ளார்.   இவர்கள் சிதம்பரம் அருகே உள்ள அம்மா பேட்டை கான்சாகிப் வாய்க்கால் பாலத்தில் உள்ள, வளைவு பகுதியில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த  இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் வாய்க்காலின் உள்ளே விழுந்தனர். இதில் அஜித்குமாருக்கு நீந்தி கரைக்கு திரும்பினார்.

 

ஆனால்  வண்டியை ஓட்டி வந்த மணியை காணவில்லை. இதுபற்றி உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அண்ணாமலைநகர் ஆய்வாளர் வீரமணி தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரசோழன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வாய்க்காலுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். 


 தொடர்ந்து தேடியும் மணியை கண்டு பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் 23-ந்தேதி காலை சிதம்பரம் அருகே உள்ள சாரதராம் நகர் அருகே உள்ள கான்சாகிப்வாய்காலில் அவரது உடல் ஒதுங்கியது. இதனை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த உறவினர்களுடன் ஒப்படைத்தனர்.

 

இது குறித்து காவல்துறை சார்பில் வாகனம் ஓட்டும் போது மதுஅருந்தி விட்டும் தொலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டாதீர்கள் என்று காவல்துறை மற்றும் பள்ளிமாணவர்கள் கொண்டு எவ்வளவோ விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேனர் வைத்தாலும் சிலர் கண்டுகொள்ளாமல் செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. இவர்களும் தலைகவசம் அணியாமல் மதுபோதையில் வண்டியில் வந்துள்ளனர். அதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது வாகனம் ஓட்டும் போது மது அருந்தி யாரும் வண்டி ஓட்டக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹால்டிக்கெட்டை மறந்த மாணவி!  கார் டிரைவர் செய்த உதவி!

Published on 06/05/2018 | Edited on 06/05/2018

 

mani

 

மதுரையில் மேலூர் சூரக்குண்டு பகுதியைச்சேர்ந்த மாணவி டயானா. இவருக்கு பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.  இதற்காக இன்று காலையில் அவர் தனது தாயார் தனலட்சுமியிடன் கல்லூரிக்கு வந்தார்.   தேர்வு மையத்திற்குளு சென்றபோதுதான் தனது ஹால்டிக்கெட்டை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது தெரியவந்தது.  

 

இதனால் டயானா கண் கலங்கினார். தாயார் வேதனை அடைந்தார்.  இதைக்கண்ட கார் டிரைவர்  மணி என்பவர், டயானாவை காரில் அழைத்து சென்று மின்னல் வேகத்தில் 55 கிலோ மீட்டரை அரை மணி நேரத்தில் கடந்து தேர்வு மையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்.  இதனால் டயானா மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத சென்றார்.  தனலட்சுமி கொடுத்த பணத்தையும் வாங்காமல், தக்க சமயத்தில் உதவி செய்த டிரைவர் மணியை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.