Skip to main content

தயங்கிய மீட்புப் படையினர் - ஆற்றில் இறங்கி பெண்ணின் சடலத்தை மீட்ட இளைஞர்

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

அரியலூர் மாவட்டம் மேல ராமநல்லூர் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நேற்று மதியம் 12 மணி அளவில் மதனத்தூர் நீலத்தநல்லூர் பாலத்தின் வழியே சென்றது. அதனை அப்பகுதில் இருந்த பொதுமக்களும் போலீசாரும் பார்த்து தஞ்சை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

 

Boat overflowing the river


 

அதனை தொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டிருந்தால் சடலத்தை கண்ட உடனேயே அந்த உடலை மீட்டிருக்கலாம். ஆனால் அந்த உடல் அங்கிருந்து சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து 14 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தது. 
 

இதற்கிடையே அங்கிருந்த மீட்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதாக கூறி கரையோரங்களில் சென்றுகொண்டிருந்தனர். 


 

 

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடல் தஞ்சை மாவட்டம் வாண்டையார் இருப்பு நீரேற்று நிலையம் அருகே வந்தது. அதனை அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் பெண்ணின் உடல் வருகிறது என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த மீட்புப்படையினர் ஆற்றில் இறங்க தயங்கினர்.
 

 அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தைரியமாக நடு ஆற்றில் சென்று உடலை மீட்க முயற்சி செய்தார் ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. 
 

இந்த நிலையில் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அணைக்கரை பாலம் அருகே சென்று கொண்டு இருந்த உடலை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கார்த்திக் என்ற இளைஞர் தைரியமாக நடு ஆற்றிற்கு நீச்சல் அடித்து சென்று அந்த உடலை பிடித்தார்.
 

 பெண்ணின் உடலுடன் நடு ஆற்றில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யதார். இதனை தஞ்சை மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் வேடிக்கை பார்த்தனர்.
 

அந்த இளைஞன் பாலம் நெருங்குகிறது விரைவில் வாருங்கள் என்று கை அசைத்ததை தொடர்ந்து மீட்பு படையினர் சில குதித்து அவருக்கு உதவி செய்து சடலத்தை ஒரு முட்புதர் பகுதியில் எடுத்து வந்தனர். 
 

தமிழகம் முழுவதும் எதிரொலித்த இந்த விபத்தை எப்படி கையாள வேண்டும் உடலை எப்படி மீட்க வேண்டும் என்று கூட தெரியாமல் அங்கிருந்த அதிகாரிகள் கரை பகுதியில் இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்தது விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


 

 

மாவட்ட அதிகாரிகள் முழுமையாக அங்கு இருந்தும் 5 மணி நேரம் ஒரு பெண்ணின் உடலை மீட்க முடியாமல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

லட்சக்கணக்கில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்த்த நிலையில் இளைஞர் ஒருவர் ஆற்றில் நீண்ட நேரம் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தது அங்கே பார்த்துக் கொண்டிருந்த பொது மக்களிடையே பாராட்டத்தக்க வகையில் இருந்தது.
 

எந்த ஒரு அதிகாரியும் எந்த உத்தரவும்பிறப்பிக்கவில்லை. ஆனால் அனைத்து அதிகாரிகளும் அங்கேதான் இருந்தனர். பெண்ணின் உடலை மீட்ட கார்த்திக் என்ற வாலிபரை அரசு பாராட்ட வேண்டும். அவருக்கு காவல்துறை அல்லது தீயணைப்பு துறையில் பணி  வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இது போன்று திறமை, துணிவு உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் என்றனர் பொதுமக்கள். 

  
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.