Published on 20/04/2019 | Edited on 20/04/2019
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்18 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.