Skip to main content

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

நெல்லை பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ராமசுப்பு மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட போது வாசன் அணிக்கு சென்று பின் காங்கிரசுக்கே, திரும்பியவர் ராமசுப்பு. அவருக்கு ஆலங்குளம் நகரிலிருந்து இடைகால் அம்பை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க், கல்குவாரி இரண்டும் அடுத்தடுத்து உள்ளன. இந்தத் தொழிலில் நீண்ட காலமிருப்பவர். அதே சாலையில் அண்மையில்தான் கிரஷ்ஷர் பேக்டரியும், டைல்ஸ் விற்பனைக் கம்பெனியும் தொடங்கியிருக்கிறார் ராமசுப்பு. ஜல்லிக்கற்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
 

இன்று (26/02/2020) மதியம் ஒரு மணியளவில் நெல்லையிலிருந்து வந்த வருமான வரித்துறையின் 13 அதிகாரிகள், ராமசுப்புவின் பெட்ரோல் பங்க் மற்றும் கல்குவாரி போன்றவைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இவைகளையடுத்து அவரின் கிரஷ்ஷர், மற்றும் டைல்ஸ் கம்பெனிகளில் சோதனை நடத்தப்படலாம் என்கின்றனர்.
 

நாம் இது குறித்து எக்ஸ். எம்.பி. ராமசுப்புவைத் தொடர்பு கொண்டதில், அப்படியா ரெய்டா என்று பரபரப்பு காட்டியவர் போன்று பேசியவர், நான் வெளியூரிலிருக்கேன். ஏதாவது கணக்கு கேட்டு வந்திருப்பாங்க என்றார் அலட்டிக் கொள்ளாமல். ஆனால் சோதனையின் போது அவரது கார், ஸ்பாட்டில் நிற்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்