Published on 29/12/2020 | Edited on 29/12/2020

ஆசிரியர் பணிக்காக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
'ஆசிரியர் பணி தொடர்பாக வரும் நம்பகத்தன்மையற்ற தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். அங்கீகரிக்கப்படாத நபர்கள், சில விண்ணப்பத்தாரர்களைத் தொடர்பு கொண்டு பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். ஏமாற்றி வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் எந்த ஒரு தூண்டுதல்களுக்கும் இரையாகாமல் இருக்க வேண்டும்' என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.