Skip to main content

வருகிற கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேளாண்மை பாடம்: அமைச்சர் செங்கோட்டையன்

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
sengo


வருகிற கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேளாண்மை பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான பள்ளி கல்வித் திருவிழா இன்று மாலை நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,

"நம் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை பார்த்து வியந்து போனேன், மாணவ மாணவிகள் தங்கள் உணர்வுகளை நுணுக்கமாக கலை மூலம் வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தனர். அடுத்த ஆண்டு பாட திட்டத்தில் வேளாண்மை குறித்த பாடத் திட்டம் உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.

அடுத்த கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய சீருடைகள் அரசு பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ப்ளஸ்டூ மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் ப்ளஸ்டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்வு பெற்று மருத்துவர்கள் ஆவார்கள்.

ப்ளஸ்டூ முடித்தவுடன் பட்டையகணக்காளர் படிப்பு படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு 500 பட்டய கணக்காளர்களை கொன்டு 25 ஆயிம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கலை பண்பாட்டை காக்க இனி வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு யோகா கற்று கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல முயற்சி நின்றாலும் மரணம் போலத்தான் ஆகவே மாணவர்கள் தொடர் முயற்சிகள் மூலம் அவர்களது வாழ்க்கை மேம்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்" எனப் பேசினார்.

நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்..

"அடுத்தாண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் வேளாண்மை, தோட்டக்கலை, டூரிசம், மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட தொழில் சார்ந்த கல்வி கற்றுத் தர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது இதில் எந்த வகை தொழில் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து ஒரு மாதத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்" என்றார்.

இக்கலைத் திருவிழாவில் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர் பிரிவில் சாம்பியனாக திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றன. இதேபோல் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர் பிரிவில் சாம்பியனாக தஞ்சாவூர் மாவட்டம் முதலிடம், திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடம், திருநெல்வேலி மாவட்டம் மூன்றாம் இடமும் பெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், எம்பி சுந்தரம், எம்.எல்.ஏக்கள் பொன் சரஸ்வதி.பாஸ்கர், ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“2024ல் அதிமுக வெற்றி பெறுவதற்கான நிகழ்வாக இது இருக்கும்” - செங்கோட்டையன்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

“This will be the event for AIADMK to win in 2024” - Sengottaiyan

 

ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ““இப்போது முதல்கட்டமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நிறைவேறி வருகிறது. இந்த படிவங்களை பூர்த்தி செய்த பின் அடையாள அட்டைகள் அதிமுக சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் நிகழ்ச்சியாக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு அமைந்துள்ளது. திருப்புமுனையாக 2024 தேர்தல் அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை படைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

 

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். எந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கிருக்கும் விவசாயிகளும் பராட்டுக்கூட்டத்தை நடத்தினர். அதிமுக பாஜகவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப பிரதமரை சந்திப்பார்” எனக் கூறினார்.

 


 

Next Story

2026ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி? - முன்னாள் அமைச்சர் பதில்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Annamalai-led BJP rule in 2026? The former minister replied

 

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று மாலை துவக்கி வைத்தேன். ஏனென்றால் புனித வெள்ளியான நேற்று ஒரு நகரச் செயலாளரிடத்தில் படிவங்களைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தேன்.

 

இன்று அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி நகரச் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இனி அதிமுக என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத ஒன்று என்று இந்த உறுப்பினர் சேர்க்கையில் உருவாக்கிக் காட்டுவோம். 

 

அண்ணாமலை தலைமையில் 2026ல் பாஜக ஆட்சி அமையும் எனச் சொல்கிறார்கள். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றியுள்ளேன். அந்த உரையை உங்களுக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனச் சொல்கிறீர்கள். ஆனால், பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் சந்திக்கிறார்” என கேள்வி எழுப்பியதற்கு, “அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குறைந்தது ஒரு தொகுதியில் 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு” என்றார்.