Skip to main content

குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

மக்களவை தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெறுவதால் நாடு முழுவதும் பரபரப்பாக இருக்கிறது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சி்யின் செய்தி தொடர்பாளர் குஷ்பு உடல்நலக்குறைவினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

k

 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளேன்.  இதனால், தொலைக்காட்சி விவாதங்களில் என்னை நீங்கள் பார்க்க முடியாது.  என் கஷ்டகாலம் இன்று நடக்கும் நாடகங்களை நான் நேரில் பார்க்கவும் முடியவில்லை.  நாம் ஒன்று நினைத்தால் இயற்கை  அதற்கு நேர்மாறாக நடக்கிறது.  வருத்தமாக இருக்கிறது...’’என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்