Skip to main content

2 வது ரிக் இயந்திரமும் பழுது... துளையிடும் பணி நிறுத்தம்!

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு  நான்காவது நாளாக  66 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.  

 

hh

 

நேற்று இரவு 12 மணியிலிருந்து அதிவேக திறன் கொண்ட ரிக் இயந்திரம் துளையிடும் பணியில் ஈடுபட்டுவருகிறது. தற்பொழுது வரை 40 அடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வ தகவலாக வருவாய் நிர்வாகம் ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரிக் இயந்திரத்தின் போல்ட் நட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்காலிகமாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பதினைந்து நிமிடங்களில் அந்த பழுது நீக்கப்பட்டு மீண்டும் பள்ளம் தோண்டும் பணியை  ரிக் இயந்திரம் மேற்கொள்ளும் எனவும் தகவல்கள் வந்துள்ளன. 

 

சார்ந்த செய்திகள்