Skip to main content

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சிறப்பு பேருந்துகள்!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020

 

10th board exam students special bus mtc announced


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற்றிட ஏதுவாக 63 வழித்தடங்களில் 109 மாநகர சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 


சிறப்புப் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்; ஆசிரியர்கள் பயணச்சீட்டு பெற்று பயணிக்கலாம்; பிற பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை. மாணவர்கள் சிறப்புப் பேருந்துகளைக் கண்டறிய பேருந்துகளின் முகப்பில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர், ஆசிரியர் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்