Skip to main content

பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி.. வீடுதோறும் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்.. - வி.சி.க. அழைப்பு!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

 

பிரதமர் மோடியின் வருகையின்போது, வீடுகள் தோறும் கறுப்புக்கொடி கட்டிவைக்க வேண்டும் எனவும், அவர் செல்லும் வழியெல்லாம் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பைக் காட்டவேண்டும் எனவும் விசிக சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து அந்தக் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

 

பாதுகாப்புத்துறைத் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். ஏற்கனவே, திமுக தலைமையில் கூட்டப்பட்ட தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிரதமர் மோடி செல்லும் வழியெங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறவழியில் நமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

 

உச்சநீதிமன்றம் தெளிவாக அறிவித்த பிறகும் அது விதித்தக் கெடுவை மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு, தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டுமெனவும், கறுப்பு உடையோ கறுப்பு பட்டையோ அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மேகதாதுவில் அணை - ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

cauvery management board meeting tamilnadu goverment  officer

 

மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் ஹல்தர் தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று (25/06/2021) காலை 11.00 மணிக்கு கூடியது. காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

 

தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

 

கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள், மேகதாது அணை விவகாரத்தை எழுப்பினர். மேலும், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய அரசிடம் எப்படி கர்நாடகா அனுமதி பெற முடியும்? அணைகட்ட அனுமதி பெறுவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியது குழப்பம் ஏற்படுத்தக் கூடியது. மேகதாது மட்டுமின்றி காவிரியில் எங்கு அணை கட்டினாலும் எங்களது அனுமதி தேவை” என்று ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

Next Story

ஜூன் 22- ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

cauvery management board metting video conference

 

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 22- ஆம் தேதி அன்று காணொளி மூலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

 

இந்த கூட்டத்தில்தான் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நீர் திறப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். குறிப்பாக, அந்த மாநிலங்களில் பெய்து இருக்கும் மழையின் அளவு அடிப்படையிலும், அணை பகுதிகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்ற அடிப்படையிலும் நீர் திறப்பு முடிவு செய்யப்பட உள்ளது. 

 

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.